Tuesday, June 9, 2009




கல்யாணம் செய்தாலும் காதலியுங்கள் !!!


இங்கே காதல் என்ற தூண்டில் போட்டு

கரை எற துடித்தவர்கள்

கால் வழுக்கி தான் பார்த்திருக்கிறேன்

உணர்வுகளை புழுவாக்காதிர்கள்

உள்ளத்தை காட்டுஙகள்

உள்ளங்கையில் காதல் மீன் வரும்

காதல் என்பது என்ன?

நட்பா ? காமமா ?

இரண்டும் இல்லை,

இவை இரண்டும் கலந்த புரிதல்

புரிதல் இல்லா காதல்

வாழ்க்கை இல்லை

புரிதல் வரும் முன் காதலிக்காதீர் ,

புரிதல் வரும் முன் கல்யாணம் செய்யாதீர்

ந்ட்பு மட்டுமே காதல் அல்ல

காமம் என்பதும் பாவம் அல்ல

அது தான் காதலையும்

கல்யாணத்தையும்சேர்த்து வைக்கும்

கல்யாணம் என்பது என்ன ?

கல்யாணம் என்பது தரகு அல்ல

உங்கள் தேவைகளை பூர்த்தி செய்வதர்க்கு

காதலித்தால் கல்யாணம் செய்யுங்கள்

கல்யாணம் செய்தாலும் காதலியுங்கள் !!!

என் அப்பாவின் நினைவாக



என் அப்பாவின் நினைவாக

இதோ நீங்கள் சென்று

இருபது வருடங்கள் போய் விட்டது

ஆனாலும்

என்னுடனேயே இருக்கிறிர்கள்

ஆமாம்

என் செயல் ஒவ்வொன்றிலும்

உங்களை நான் பார்கிறேன்

ஒரு தந்தையாய் இன்று

எனக்கு கிடைத்த மரியாதை

அது உங்களோடு இருந்த காலத்தில்

நான் கற்ற பாடங்கள்

நான் இழந்த மதிப்பு

அது என்னுடன் நீங்கள்

இல்லாமல் போனதால் ஏற்ப்பட்ட விபத்து

அய்யா எங்கிருந்தாலும்

என்னை வழி நடத்துங்கள்

உங்கள் வழியில் நான்